Thursday, November 8, 2012

Devathai

தேவதை :

ஊர்  உறங்கும்  காலம் ......
ஊதக் காத்து வீசும் நேரம் ......
ஊரணி கரை ஓரம் ......
ஒருத்தி  அவள பாத்தேன் !!!!
ஊழல் இல்லா தேசம் பாத்தது போல் ...
ஊமையாகிப் போச்சு மனசு !!!!!

Monday, September 24, 2012

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு புதிய பொலிவுடன் மீண்டும் ............

Tuesday, September 7, 2010

நிதர்சனம்

அழகான காலை
மலையின் தலையைத் தட்டிச் செல்லும் மேகம்
எதிரே ஏரி, அதன் மேல்
காதலன் நுகரும் காதலி சேலை போல் பனி
கொஞ்சம் தேனீர், அருகே
அதை விட சூடாய் செய்திகள் தாங்கி தினசரி
பச்சைப் புல்வெளி, அங்கே
நீர் கீரீடம் தாங்கி நிற்கும் திமிரில் புற்கள்
குயிலின் ஓசை, அதில்
துணையைத் தேடும் எதிர்பார்ப்பு கூடவே கொஞ்சம் இறுமாப்பு
மெல்லிய காற்று, அதில்
ஏதோ இனம் பிரிக்க முடியா வாசம்
நியாயமாய் கவிதை வடிக்கத்தோன்றும் சூழல், ஆனால்
ஈனமாய் ஒரு குரல்
சோறு வடிச்சிருக்கேன் மாமா, சீக்கிரம் எந்திரிச்சு பொழப்புக்கு போ
கனவு கலைந்தது, வழக்கம் போல்.

Friday, September 3, 2010

மழை

ஆட்டோகாரனுக்கு பிடித்தது, மீட்டருக்கு மேல் வரும் என்பதற்காக
அண்டை மாநிலத்தவனுக்கு பிடிக்கவில்லை, மீட்டருக்கு மேல் போகும் (தண்ணீர்) என்பதற்காக.

தமிழ்

சேட் ஸ்வீட் கடை,
எல்லா அயிட்டத்தையும் விட
இனிக்கிறது "சேட்"டின் தமிழ்

பாசம்

அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்!!
108 க்கு கூப்பிடச் சொன்னேன்
அம்மா சொன்னாள், கூட்டினா 9 வருது,
அப்பாவுக்கு ஆகாது!!

சபை வணக்கம்

உலகளாவிய தமிழர்களே, உங்களை வணங்கி (நம்பி!!!!) என் வலைப்பூ இன்று பூக்கிறது.